Tuesday, February 22, 2011

சுனாமி நிலநடுக்கம் கலகம் போராட்டம் தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

சுனாமி, நிலநடுக்கம், கலகம், போராட்டம், தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

கலகம், சுனாமி, தீவிரவாதம், நிலநடுக்கம், போராட்டம் போன்றவற்றினால் உயிர்கள் மொத்த மொத்தமாக பலியாவதை முன்கூட்டியே ஜோதிடம் மூலம் சில ஜோதிடர்கள் கண்டிப்பாக அறிந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை. இதற்கான காரணங்களாக நான் கருதுவது

1. சந்தேகம்: தன்மேல் தனக்கே நம்பிக்கை இல்லாமல் போவது. நமக்கு ஏன் வம்பு. ஒருவேளை நாம் சொன்னது பலிக்காமல் போய்விட்டால் அப்புறம் நாம் எது சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை. நமது ஜோதிட தொழிலே காலி. அதனால நாம் வாய மூடிக்கிட்டு கம்முனு இருப்போம் என்று சில ஜோதிடர்கள் நினைப்பது.எங்கே தாம் தவறாக கணிதம் செய்கிறோமோ என்ற சந்தேகம் வேறு. அப்புறம் நடந்துவிட்ட பின்னர் பார்த்தியா! நான் அப்பவே பக்கத்து வீட்டில் அப்படி சொன்னேன். இங்கு இப்படி சொன்னேன். அதுபடி நடந்து விட்டது என்று சொல்லும் ஜோதிடர்களும் உள்ளனர். இவர்கள் அக்கம்பக்கம் மட்டும் தனக்கு நெருக்க மானவர்களிடம் மட்டும் உண்மையை சொல்லியிருப்பார்கள். ஆனால் பகிரங்கமாக அறிவித்து இருக்கமாட்டார்கள். சந்தேக மனநிலை கொண்டவர்கள் இவர்கள்.

2. பாதுகாப்பின்மை : நிலநடுக்கம் வந்து அதனால் சுனாமிவரும் என்று சில சமயங்களில் அரசே எச்சரிக்கை விட்டுள்ளது. ஆனால் சுனாமி வரவில்லை. ஆனால் இதேமாதிரி ஜோதிடர்கள் அறிக்கைவிட்டால் வதந்தியை பரப்புதல் அல்லது பீதியை கிளப்புதல் ஆகிய பிரிவின் கீழ் குற்றம் சுமத்துவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.பிளாக்கில் இச்செய்திகளை போட்டால் எங்கே சைபர் கிரைம் என குற்றம் சுமத்துவார்களோ என்ற சந்தேகமும காரணமாக இருக்கலாம். ஜோதிடர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு பாதுகாப்பு தேவை. பாதுகாப்பு இல்லாமையால் போராட்டம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது. இது குறித்து சட்ட நிபுணர்கள் இங்கே கமணட் பகுதியில் ஆலோசனை தந்தால் நல்லது.

3. சில ஜோதிடர்களுக்கு தெரியும். ஆனால் சொல்லமாட்டார்கள் எல்லாமே இயற்கையாக நடப்புது நாம் சொல்லி தடுக்கவா முடியப்போகுது. சொல்வதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைப்பது. இப்படிப்பட்ட ஜோதிடர்கள்தான் தங்களது வாடிக்கை யாளர்களுக்கு என் ஆயுள் எப்படி உள்ளது என்று கேட்டால் ஆயுள் குறைவாக இருந்தாலும் கூட ரெம்ப தீர்க்கமாக இருக்கு என்று சொல்வார்கள். சில வீட்டில் கணவன் மனைவி பல காரணங்களினாலும் பிரிந்து போயிருப்பார்கள் ஆனால் சேரவே முடியாதபடி ஜாதகம் இருக்கும். ஆனால் ஜோதிடர்கள் உண்மையை மறைத்து சீக்கிரம் சேருவீர்கள்
இவ்வளவு காலம் கழித்து சேர்விர்கள். இன்னன்ன பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பமாட்டார்கள். வாடிக்கையாளர் மனம் சந்தோஷத்துடன் செல்லட்டும் என்றே நினைப்பார்கள். எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று கேட்டாலும் இந்த மாதிரியே வேண்டுமென்ற உண்மையை மறைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு
அனுப்பும் ஜோதிடர்களும் உள்ளனர். இந்த மாதிரி ஜோதிடர்கள் இருப்பதனால் கலகம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது.

4. சில ஜோதிடர்களுக்கு இந்த உலகத்தில் நிறைய உயிர் இழப்புகள் வரப்போவது தெரியும். ஆனால் எந்த நாட்டில் எந்த பகுதிகளில் என்பது தெரியாமல் இருக்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு பூகோள அறிவும் சரித்திர அறிவும் இல்லாமல் ஜோதிட அறிவுமட்டும் இருந்திருக்கும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் நாம் நிலநடுக்கம், சுனாமி, கலகம், தீவரவாதம் , போராட்டம் போன்ற காரணங்களால் உயிரிலப்பு ஏற்படவதை முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது
இலவச ஜோதிட பலன்